<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<title>Volume 10 Issue 02</title>
<link href="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14520" rel="alternate"/>
<subtitle/>
<id>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14520</id>
<updated>2026-04-05T19:37:39Z</updated>
<dc:date>2026-04-05T19:37:39Z</dc:date>
<entry>
<title>Protracted Refuge and Ethno-Nationalistic issue of Bhutanese Magar  Ethnic Refugee Community in Nepal</title>
<link href="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14539" rel="alternate"/>
<author>
<name>Vickneswaran.G</name>
</author>
<id>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14539</id>
<updated>2025-09-06T22:05:23Z</updated>
<published>2021-01-01T00:00:00Z</published>
<summary type="text">Protracted Refuge and Ethno-Nationalistic issue of Bhutanese Magar  Ethnic Refugee Community in Nepal
Vickneswaran.G
This ethnographic study is concerned with Magar ethnic community of &#13;
Lhotsampas and their pendulant situation in the nationalistic stand. Magars in Bhutan &#13;
practiced Brahministic ritual tradition before they exiled. After they found refuge in &#13;
Nepal, they changed their ritual practice from Brahministic one to their original &#13;
Lamastic tradition of Bonbo sect. Even though actions taken by authorities to repatriate &#13;
these refugees to Bhutan and the expatriate extremists in refugee camps also compel &#13;
them to return to their national homeland, Magars refute to return there and stipulate to &#13;
reintegrate within Nepal population. The study finds that as exiled Magars found their &#13;
refuge in Nepal, they have changed their ritual tradition in order to adjust their way of &#13;
life consistent with the Nepal’s Magar communities. Such change has its reflections in &#13;
ethno-nationalistic stand of this community and it eventually let them to stay firm in &#13;
reintegration strategy among three enduring resolving strategies of refugee problem.
</summary>
<dc:date>2021-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>மத்திய கிழக்கு அரபு நாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக குடும்பப்  பெண்கள் செல்வதற்கான காரணங்களும் அதனால் அவர்களின் குடும்ப  வாழ்வில் ஏற்படும் தாக்கங்களும்:  இஸ்லாமிய சமய மற்றும் சமூகப் பார்வை</title>
<link href="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14538" rel="alternate"/>
<author>
<name>தலிப்.ஐ.எம்</name>
</author>
<id>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14538</id>
<updated>2025-09-06T22:05:22Z</updated>
<published>2021-01-01T00:00:00Z</published>
<summary type="text">மத்திய கிழக்கு அரபு நாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக குடும்பப்  பெண்கள் செல்வதற்கான காரணங்களும் அதனால் அவர்களின் குடும்ப  வாழ்வில் ஏற்படும் தாக்கங்களும்:  இஸ்லாமிய சமய மற்றும் சமூகப் பார்வை
தலிப்.ஐ.எம்
ஒரு குடும்ப வாழ்வுக்கு தொழில் இன்றியமையாதது. ஒரு குடும்பத்தில் ஒருவர் &#13;
மாத்திரம் உழைத்து குடும்ப வாழ்க்கையை சரியாக கொண்டு செல்ல முடியாது &#13;
என்று கருதுமளவிற்கு வாழ்க்கைச் செலவீனம் மிகைத்துக் காணப்படும் இக்கால &#13;
சூழலில், குடும்பத் தலைவிகளான பெண்கள் தொழிலுக்காக தமது வீட்டை, தாய் &#13;
நாட்டை, வீட்டை மற்றும் குடும்பத்தை விட்டு, மத்திய கிழக்கு அரபு நாடுகளுக்கு &#13;
செல்வதில் உள்ள சிக்கல் நிலமைகளை, இவ்வாய்வு பிரச்சினையாக கொள்கிறது. &#13;
குடும்பத் தலைவர்களான ஆண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் நிமித்தம் &#13;
செல்வதால் பிரச்சினைகள் இருந்தபோதும், ஒப்பீட்டளவில் ஒரு குடும்பத் தலைவியான &#13;
தாயின் வெளிக்கிளம்புதலினால், குடும்பத்தில் ஏற்படும் தாக்கங்கள் மிகவும் &#13;
மோசமானதாகவும், எதிர்கால சந்ததிகளான பிள்ளைகளின் நடத்தையிலும், &#13;
கல்வியிலும் பலத்த சீரழிவுகளை ஏற்படுத்தி விடுகிறது என்பதை மறுக்க முடியாது, &#13;
இவ்வாறான சூழலில், இஸ்லாமிய வழிகாட்டல்களை எடுத்துக் காட்டுவதுடன், &#13;
சமுதாய நடைமுறையில் இதனால் ஏற்படும் அவலங்களை வெளிக்கொணர்வதே &#13;
இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். மத்திய கிழக்கு அரபு நாடுகளை இங்கு &#13;
நோக்குவதற்கான காரணம், தமிழ்மொழி பேசும் பெண்கள் வேலைவாய்ப்புக்காக, &#13;
அதிகமாக மத்திய கிழக்கு அரேபிய நாடுகளை நோக்கியே படையெடுப்பதானால், &#13;
மொழித் தொடர்பாடலில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர், ஆயினும் மலேசியா &#13;
மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் பரவலாக &#13;
பேசப்படுவதனால், தொடர்பாடல் இலகுவானதாக காணப்பட்டாலும், ஏற்படும் &#13;
தாக்கங்களும், பாதிப்புக்களும் பொதுவானதே. இதற்கான பகுப்பாய்வு இஸ்லாத்தின் &#13;
மூலாதாரங்களான அல்குர்ஆன் மற்றும் அல் ஹதீஸ் ஆகியவற்றின் கருத்துக்களின் &#13;
அடிப்படையில் பெறப்பட்டு, சமுதாய நடைமுறைகளோடு ஒப்பிட்டு &#13;
விவாதிக்கப்படுகிறது.
</summary>
<dc:date>2021-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>சட்ட ஆட்சியும் அது சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளமையும் : 2018  ஒக்டோபர் 26 ஆம் திகதிக்குப் பின் ஏற்பட்டிருந்த அரசியல்  நெருக்கடியினை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு</title>
<link href="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14537" rel="alternate"/>
<author>
<name>சிவநாயகம்.செ</name>
</author>
<id>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14537</id>
<updated>2025-09-06T22:06:00Z</updated>
<published>2021-01-01T00:00:00Z</published>
<summary type="text">சட்ட ஆட்சியும் அது சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளமையும் : 2018  ஒக்டோபர் 26 ஆம் திகதிக்குப் பின் ஏற்பட்டிருந்த அரசியல்  நெருக்கடியினை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு
சிவநாயகம்.செ
ஜனநாயக முறைமையில் சட்வாட்சிக் கோட்பாடானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். &#13;
அதாவது ஒருநாட்டில் ஆட்சிமுறையானது சட்டத்தின் அடிப்படையிலேயே &#13;
மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இது வலியுறுத்துகின்றது. அத்துடன் &#13;
அந்நாட்டிலுள்ள ஆட்சியாளர்களும், பிரஜைகளும் அங்குள்ள சட்டங்களுக்கு &#13;
ஒத்தமுறையில் கட்டுப்படுதல் வேண்டும் என்பதை இது வலியுறுத்துகின்றது. &#13;
இலங்கையில் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஆட்சிமாற்றம் &#13;
தொடர்பாக நிறைவேற்றுத்துறைக்குத் தலைவரான ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட சில &#13;
தீர்மானங்கள் சட்டவாட்சிக் கோட்பாட்டினை சவாலுக்குட்படுத்தியிருந்தன. இதனால் &#13;
நாட்டில் ஓர் அரசியல் நெருக்கடி நிலை உருவாகியிருந்தது. ஜனாதிபதி நாட்டின் &#13;
அடிப்படைச் சட்டமாக விளங்குகின்ற அரசியலமைப்பிலுள்ள சில சரத்துக்களை மீறி &#13;
ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியதன் காரணமாக இவ்நெருக்கடி நிலை &#13;
உருவாகியிருந்தது. இவ்நெருக்கடி நிலமையினால் சட்டத்துறையின் உயர் சபையான &#13;
பாராளுமன்றத்தில் பெரும் கலவரநிலை உருவாகியிருந்ததுடன் நாட்டிலும் அரசாங்கம் &#13;
பற்றிய குழப்பநிலை நிலவியது. இதனால் நல்லாட்சிமுறை அச்சுறுத்தலுக்குள்ளாகி, &#13;
ஜனநாயகம் சவாலுக்குட்படுத்தப்பட்டமையினை ஆய்வுப்பிரச்சினையாகக் கொண்டு &#13;
சட்டவாட்சி பற்றிய தெளிவினைப் பெற்றுக்கொள்வதுடன் ஜனாதிபதி அரசியலமைப்பின் &#13;
சில ஏற்பாடுகளை மீறியுள்ளமையினை கண்டறிவதனையும் நோக்கமாகக் கொண்டு &#13;
இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தவகையில் இவ் ஆய்வானது முதலாம், &#13;
இரண்டாம் நிலைத் தரவுகளைப் பயன்படுத்தி பண்புரீதியான ஆய்வுமுறையியல் &#13;
அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி அரசியலமைப்பின் &#13;
எவ்வேற்பாடுகளை மீறியுள்ளார் என்பதையும் அதன்மூலம் சட்டவாட்சி எவ்வாறு &#13;
சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. &#13;
அத்துடன் சட்டவாட்சியைப் பாதுகாப்பதற்கான பல பரிந்துரைகளும் இங்கு &#13;
முன்வைக்கப்படுகின்றன.
</summary>
<dc:date>2021-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>இனியவை நாற்பதில் அறமும் அதிகாரமும்</title>
<link href="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14536" rel="alternate"/>
<author>
<name>சந்திரசேகரம்.சி</name>
</author>
<id>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14536</id>
<updated>2025-09-06T22:05:59Z</updated>
<published>2021-01-01T00:00:00Z</published>
<summary type="text">இனியவை நாற்பதில் அறமும் அதிகாரமும்
சந்திரசேகரம்.சி
மனித வாழ்வை மேம்படுத்துவதற்கென வகுக்கப்பட்ட ஒழுக்க விதிமுறைகளின் &#13;
தொகுப்பாக அறம் அமைகிறது. அறமென்ற இச்சொல் நீதி, ஒழுக்கம், வழக்கம், &#13;
கடமை, புண்ணியம், ஈகை, அறக்கடவுள், சமயம் என்ற பல்வேறு பொருள்களில் &#13;
கையாளப்பட்டுள்ளது. சங்கச் செய்யுட்கள் முதல் நவீன இலக்கியங்கள் ஈறாக &#13;
அறமும் அதன் வழி அதிகாரத்துவமும் வலுவான செல்வாக்கைச் செலுத்தி &#13;
வந்திருப்பதைக் காணமுடியும். சமூக அசைவியக்கத்தில் கட்டுப்பாடுகளும் &#13;
ஒழுங்கமைப்புகளும் விதிக்கப்பட்டு வந்துள்ளமையை இது காட்டுகின்றது. 'அறம் &#13;
வலியுறுத்தல்' மனித நிலைப்படுத்தலுக்குரிய கருவியாக கையாளப்பட்டுள்ளது வெவ்வேறு &#13;
 அடிப்படைகளில் ஒவ்வொரு கால கட்டத்தின் சமூக, அரசியல் &#13;
சூழ்நிலைகளும் இதற்கு ஏதுவாக அமைந்துள்ளன. &#13;
காதலையும் வீரத்தையும் முதன்மையான பொருட்கோடலாகக் கொண்ட சங்கச் &#13;
செய்யுட்களிலும் அறத்தை, நீதியை வலியுத்தும் கருத்துக்கள் செறிந்து &#13;
காணப்படுகின்றன. அரச அறமும், அரச அதிகாரமும், சமூக நீதியும் &#13;
வலியுறுத்தப்படவேண்டிய தேவை அக்காலத்தில் இருந்துள்ளது. சங்க காலத்திலிருந்து &#13;
மாறுபட்ட அரசியல், சமூக, சமயச் சூழ்நிலை சங்கமருவிய காலத்தில் &#13;
உண்டானபோது முன்னரைவிடவும் சமூக மேன்னிலையாக்கதிற்கு அறம் வலியுத்தலின் &#13;
அவசியம் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இக்காலத்தில் &#13;
அறக்கருத்துக்களை வலியுறுத்துகின்ற நூல்கள் எழுந்துள்ளன. பதினெண் &#13;
கீழ்க்கணக்கு நூல்களில் பதினொன்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய &#13;
காப்பியங்களும் அறத்தையே பிரதானப்படுத்துவனவாக ஆக்கப்பட்டுள்ளமையைக் &#13;
காணலாம். இக்கட்டுரை பூதஞ்சேந்தனாரால் பாடப்பட்ட - பதினெண் கீழ்க்கணக்கு &#13;
நூல்களுள் ஒன்றாக அமையும் இனியவை நாற்பது என்ற நூலில் &#13;
வலியுறுத்தப்பட்டுள்ள அறக்கருத்துக்களையும் அவற்றின் அதிகார &#13;
நிலைப்படுத்தலையும் எடுத்துக் கூறுவதாக அமைகின்றது.
</summary>
<dc:date>2021-01-01T00:00:00Z</dc:date>
</entry>
</feed>
