தொகுதி: 5, எண்: 1http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/42762024-03-26T02:12:06Z2024-03-26T02:12:06Zஈழத்துக் கூத்துப் பிரதிகள் பதிப்பு மரபும் 'குருக்கேத்திரன் போர்'வீ.அரசுhttp://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/42912020-08-02T15:54:54Z2018-01-01T00:00:00Zஈழத்துக் கூத்துப் பிரதிகள் பதிப்பு மரபும் 'குருக்கேத்திரன் போர்'
வீ.அரசு
தமிழகத்திலும் ஈழத்திலும் வாய்மொழி மரபு, ஆற்றுகை மரபு, ஓலைச்
சுவடி மரபு, கையெழுத்துப் பிரதிகள் மரபு என்பவை எவ்வாறு அச்சு
மரபிற்குள் கொண்டுவரப்படுகின்றன? என்ற விடயம் குறித்து விரிவான
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என்ற வினாவை எழுப்பிக்
கொள்ளலாம். பழைய மரபிலிருந்து புதிய மரபிற்குள் ஒரு பிரதி
மாற்றம் பெறும் போது, அதன் மூலம் உருப்பெறும் பல்வேறு
பரிமாணங்கள் குறித்தும் உரையாடுவது அவசியம். இந்தப் பின்புலத்தில்
வடிவேல் இன்பமோகன் பதிப்பித்துள்ள 'குருக்கேத்திரன் போர்
(வடமோடிக் கூத்து)' (2017) என்னும் பிரதி உருவாக்கம் எவ்வாறு
நிகழ்ந்துள்ளது என்பது தொடர்பான வரலாற்று நிகழ்வுகளை
இத்தருணத்தில் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
2018-01-01T00:00:00Zஇலங்கைப் பெண் கவிதைகளில் ஆண்களும் அதிகாரமும்எம்.எம். ஜெயசீலன்http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/42902020-08-02T15:54:54Z2018-01-01T00:00:00Zஇலங்கைப் பெண் கவிதைகளில் ஆண்களும் அதிகாரமும்
எம்.எம். ஜெயசீலன்
பெண்ணியக் கருத்துநிலைகளும் அவை பற்றிய உரையாடல்களும்
ஆணாதிக்கத்துக்கு எதிரான உரையாடல்களாகவே ஆரம்பமாகின்றன.
ஆண் அதிகாரச் சமூகமும் அதன் ஆதிக்கக் கருத்துருவங்களும்
பெண்களின் சுயாதீனமான இருத்தலுக்குப் பெருஞ் சவாலாக
விளங்குகின்றன. அதனால் பெண்களின் இருப்புப் பற்றிய எல்லாவிதமான
உரையாடல்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆண்
அதிகாரத்துடன் தொடர்புபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. பெண்களின்
சுயாதீனமான இருத்தலை நிலைநிறுத்த முயற்சிக்கும் பெண்ணியம்,
நிலவுகின்ற மரபார்ந்த ஆணாதிக்கச் சமூக அமைப்பையும் அச்சமூக
அமைப்பைக் கட்டிக்காக்கும் கருத்துருவங்களையும் நிராகரித்து,
அவற்றை மீள்நிர்மாணம் செய்ய முயற்சிப்பதோடு அம்மீள்நிர்மாணத்திற்குத்
தடையாக அமையும் அனைத்துத் தளைகளையும் தகர்த்தெறிவதற்கான
கலகத்தையும் முன்னிறுத்துகின்றது. அதனாலேயே பெண்ணிய
நிலைப்பட்ட அணிதிரட்டல், விழிப்புணர்வு முதலிய போராட்டச்
செயற்பாடுகள் யாவும் ஆண் அதிகாரத்தை எதிர்ப்பதையும் பால்
அசமத்துவத்தை நிர்மூலமாக்குவதையும் மையச்சரடாகக் கொண்டுள்ளன.
2018-01-01T00:00:00Zதெருக்கூத்துப் பாணிகள்இரா. சீனிவாசன், மு. ஏழுமலைhttp://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/42892020-08-02T15:54:54Z2018-01-01T00:00:00Zதெருக்கூத்துப் பாணிகள்
இரா. சீனிவாசன், மு. ஏழுமலை
தமிழகத்தின் கலை வடிவங்களில் தொன்மையானதாகவும், அரங்கக்
கூறுகளை முழுமையாக உள்வாங்கியும் உள்ள நிகழ்த்துக்கலை வடிவம்
தெருக்கூத்துக் கலையாகும். இத்தகைய தெருக்கூத்துக் கலை குறித்து
ஆராயும்பொழுது, தெருக்கூத்துப் பாணிகள் குறித்தும் கவனம் செலுத்த
வேண்டியது இன்றியமையாததாகும். இந்நிலையில், தெருக்கூத்துக்
கலையில் பாணி என்றால் என்ன? எத்தகைய வேறுபாடுகளால் பாணி
அடையாளப்படுத்தப்படுகிறது? எத்தனை வகையான பாணிகள் உள்ளன?
இப்பாணியை அங்கீகரிப்பவர்கள் யார்? அங்கீகரிப்பவர்கள் எத்தகைய
பயிற்சியைப் பெற்றவர்கள்? என்னும் பன்முகப் பார்வையில் ஆராயும்
பொழுதுதான் தெருக்கூத்துப் பாணிகள் குறித்த முழுமையான
புரிதலைப்பெற முடியும்.
2018-01-01T00:00:00Zசூழலியல் அழகியலும் பேண்தகு அபிவிருத்தியும்இ. பிறேம்குமார்http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/42882020-08-02T15:54:53Z2018-01-01T00:00:00Zசூழலியல் அழகியலும் பேண்தகு அபிவிருத்தியும்
இ. பிறேம்குமார்
20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் தோன்றிய
அழகியல் சார்ந்த துறைகளுள் ஒன்றாக சூழலியல் அழகியல் காணப்
படுகின்றது. இயற்கை சூழல் பற்றிய ஆய்வுகள் முன்னொருபோதும்
இல்லாத அளவிற்கு பல்வேறு துறைகள் சார்ந்த அறிஞர்களினாலும்
ஆராய்ச்சியாளர்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் இக்காலப்
பகுதியில் சூழல் பற்றிய அழகியல் நோக்கு முக்கியத்துவம் பெறுகின்றது.
சூழலியல் அழகியலில் அடிப்படை சிந்தனைகளை நாம் ஜேர்மானிய
மெய்யியலாளரான இமனுவல் காண்டிடம் காணமுடிகின்றது. காண்ட்
அளவிடமுடியா அழகு என்ற கருத்தின் அடிப்படையில்
இயற்கை சூழலின் அழகினை எமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.
இத்தகைய நோக்கு சூழலியல் அழகியலின் ஆரம்பமாக அமைந்து
விடுகின்றது. இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட சூழல்
தொடர்பான அழகியல் சார்ந்த விடயங்களையும் மதிப்பீடுகளையும்
உள்ளடக்கிய துறையாக சூழலியல் அழகியல் காணப்படுகின்றது.
அழகியல் வரலாற்றில் சூழல் சார்ந்த அழகியலுடன் தொடர்புபட்ட
நயத்தல் என்பது பல வளர்ச்சி நிலைகளை கண்டுள்ளது.
18 ஆம் நூற்றாண்டில் இருந்து தற்காலம் வரை பல கட்டளைபடிம மாற்றங்களை இந்தத் துறை கண்டுள்ளது. இவற்றை ஒன்றன்
பின் ஒன்றாக நோக்குவோம். சூழலியல் அழகியலின் வளர்ச்சியினை
கட்டளைபடிம அடிப்படையில் நோக்குதல் சூழலியல் அழகியலை
புரிந்துகொள்வதற்கு மிக இலகுவான வழியாகும்.
2018-01-01T00:00:00Z