தொகுதி: 4, எண்: 1http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/42782024-03-28T21:56:45Z2024-03-28T21:56:45Zவ.வே.சு.ஐயரின் கம்பராமாயணத் திறனாய்வுகள்ஸ்ரீ.பிரசாந்தன்http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/43082020-08-02T15:55:00Z2017-01-01T00:00:00Zவ.வே.சு.ஐயரின் கம்பராமாயணத் திறனாய்வுகள்
ஸ்ரீ.பிரசாந்தன்
ஒப்பிலக்கிய அறிவு இலக்கிய ஆராய்ச்சிக்கு இன்றியமையாததாகும்.
ஒப்பிலக்கிய ஆய்வுவழி பெற்றுக்கொள்ளப்படும் முடிவுகள்,
படைப்பாளிகளின் இலக்கிய ஸ்தானத்தை அறிவதற்கு முக்கிய
மானவை. ஒரு படைப்பாளியை, பிற படைப்பாளிகளுடன் ஒப்பிடுகின்ற
பொழுதுதான் குறித்த அப்படைப்பாளியின் தனித் தன்மைகள்
உண்மையில் துலாம்பரமாகத் தெரியவருகின்றன. காணப்படும்
ஒற்றுமைகளுக்கு மத்தியிலும் இருக்கின்ற வேறுபாடுகள், அவனது
உண்மை ஆளுமையைத் தரிசிப்பதற்கு வழி செய்கின்றன.
2017-01-01T00:00:00Zஅறிவின் உலகமயமாக்கலும் அறிவுச் சமுகங்கள் பண்பாட்டில் வேர் கொள்ளல் எனும் தேவையும்ந.முத்து மோகன். இந்திரா மோகன்http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/43072020-08-02T15:55:01Z2017-01-01T00:00:00Zஅறிவின் உலகமயமாக்கலும் அறிவுச் சமுகங்கள் பண்பாட்டில் வேர் கொள்ளல் எனும் தேவையும்
ந.முத்து மோகன். இந்திரா மோகன்
உலகமயமாக்கல் என்னும் கருத்து சமகாலத்திய வரலாற்றுச்
சூழலுக்கு உரிய நிகழ்வாக உள்ளது. இந்நிகழ்வு தெற்காசிய
மக்களுக்கும் அறிஞர்களுக்கும் முழுக்க புதியதோ புரிய முடியாததோ
அல்ல. முதலில் நான், உலகமயமாக்கலை| உலகின் இப்பகுதியில்
உள்ள நாடுகளில் ஷமரபும் நவீனமயமாக்கலும்| என்ற நிகழ்வுகளுக்கு
இடையிலான நீண்ட விவாதங்களின் ஒரு பகுதியாக அடையாளம்
காட்ட விரும்புகிறேன். தெற்காசிய நாடுகள், தங்களால் பெரிதும்
பேணப்பட்டு வந்த பழமையான மத, மொழி, பண்பாடு குறித்த
மரபுகளுடன், நவீனமயமாக்கலில் நீண்ட அனுபவத்தைக்
கொண்டிருக்கின்றன என்பதனை இங்கு நான் ஞாபகப்படுத்திக்
கொள்ள விரும்புகிறேன். தெற்காசியாவில் நடைபெறும் மரபுகளுக்கும்
நவீனத்திற்கும் இடையிலான விவாதம், ஆழமான வலிகளை
உள்ளடக்கிய காலனிய காலம், தெற்காசிய விழிப்புணர்வுக் காலம்,
சுதந்திரத்திற்கான போராட்டங்கள், இறுதியாக நாட்டுவிடுதலைக்குப்
பிறகான பின்னைக் காலனியச் சூழல் என்ற நெடிய பலபடித்தான
வரலாற்றைக் கொண்டதாக அமைந்துள்ளது.
2017-01-01T00:00:00Zஈழத்தமிழ் நவீன அரங்கு - பனுவலும் ஆற்றுகையும்க.சிதம்பரநாதன்http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/43062020-08-02T15:55:00Z2017-01-01T00:00:00Zஈழத்தமிழ் நவீன அரங்கு - பனுவலும் ஆற்றுகையும்
க.சிதம்பரநாதன்
ஈழத்து அரங்கப் பாரம்பரியத்தில் 1950களிலிலருந்து 1970கள் வரை
தமிழ்த்தேசிய நாடக வடிவத்திற்கான தேடல் முயற்சிகள் என்ற
அடிப்படையில் ஈழத்து அரங்கப் பாரம்பரியத்தை நவீனப்படுத்த
இடம்பெற்ற முயற்சிகள் பற்றிய ஓர் மீள்புரிதலை ஏற்படுத்த
இக்கட்டுரை முயல்கின்றது.
2017-01-01T00:00:00Zஆன்மாவிற்கு உணவாகும் சூபி இசை சூபி இசை மரபும் அதன் அழகியல் பரிமாணமும்எம்.எஸ்.எம்.அனஸ்http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/43052020-08-02T15:54:59Z2017-01-01T00:00:00Zஆன்மாவிற்கு உணவாகும் சூபி இசை சூபி இசை மரபும் அதன் அழகியல் பரிமாணமும்
எம்.எஸ்.எம்.அனஸ்
சூபிப் பிரிவினரின் பக்தி அல்லது ஆன்மீக இசையையே சூஃபி
இசை என்ற சொல் குறிக்கிறது. ஒலியும் இசையும் சூஃபிகளின்
ஆன்மீகப் பயிற்சிகளிலும் தியானங்களிலும் முக்கிய இடத்தைப்
பெறுகின்றன சூஃபிஸம் என்பது வெறுமனே கோட்பாடும் சித்தாந்தமும்
அல்ல. அதன் நேரடி இலக்கும் உணர்வும் ஆன்மீகத்தில் உயர்
ஐக்கிய நிலையை அடைவதும் அதற்கான பயிற்சியில் ஈடுபடுவதும்
ஆகும்.
2017-01-01T00:00:00Z