<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF xmlns="http://purl.org/rss/1.0/" xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<channel rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/14388">
<title>Department of Islamic Studies</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/14388</link>
<description/>
<items>
<rdf:Seq>
<rdf:li rdf:resource="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/17361"/>
<rdf:li rdf:resource="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14438"/>
<rdf:li rdf:resource="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14437"/>
<rdf:li rdf:resource="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14436"/>
</rdf:Seq>
</items>
<dc:date>2026-04-07T19:57:27Z</dc:date>
</channel>
<item rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/17361">
<title>திருக்குறள் மற்றம் இஸ்லாத்தின் பார்வையில் வாழ்க்கைத் துணைநலம் - ஓர் ஒப்பியல் ஆய்வு</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/17361</link>
<description>திருக்குறள் மற்றம் இஸ்லாத்தின் பார்வையில் வாழ்க்கைத் துணைநலம் - ஓர் ஒப்பியல் ஆய்வு
Mujahid, ALM
ஆண், பெண் இருபாலாரும் தமது வாழ்க்கைத் துணையை சரியாகத் தெரிவு செய்து கொள்வதில் இல்லற வாழ்வின் வெற்றியும், மகிழ்ச்சியும் தங்கியுள்ளது. திருமணத்திற்கான அவர்களது தெரிவில் தவறுகள் விடப்படுகின்றபோது அது அவர்களது வாழ்வில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். மணவாழ்வில் புரிந்துணர்வின்மை ஏற்பட்டு விவாகரத்துக் கூட ஏற்படலாம். எனினும் தம்பதியர் இருவரும் தத்தமதுகடமைகளை உணர்ந்து சரிவர நிறைவேற்றும் போது அவர்களது குடும்ப வாழ்வு செழிக்கவும், சிறந்த சந்ததிகள் உருவாகவும் வழி ஏற்படுகின்றது. எனவே ஒரு ஆண் தனக்குறிய துணையைத் தெரிவு செய்யும் போது மகிழ்ச்சியான, இல் வாழ்க்கைக்குப் பொருத்தமான பண்புகளைத்  தன்னகத்தே கொண்ட பெண்ணைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும்என மதவழிகாட்டுதல்கள் முலம் அறிவுறுத்தப்படுகின்றான். ஓர் ஆணோ, பெண்ணோ தனக்குரிய துணையைத் தெரிவு செய்யும் போது நடைமுறையில் கவனத்தில் கொள்ளும் பல அம்சங்கள் காணப்படுகின்றன. அவை பணம், பதவி, குலம், கோத்திரம் , அழகு போன்றவைகளாகும். நல்ல மனைவிக்குரிய இலக்கணம், பண்புகளை பல இலக்கியங்கள் எடுத்தியம்பினாலும் திருக்குறள் மற்றும் இஸ்லாத்தினுடைய வழிகாட்டல்களை ஆராயுமிடத்து அவைகளில் பல ஒற்றுமைத் தன்மைகளை அவதானிக்கலாம். ஒரு நல்ல மனைவி எத்தகைய னுணவியல்புகளை அணிகலனாகக் கொண்டிருக்க வேண்டும் என திருக்குறள் மற்றும் இஸ்லாத்தினுடைய வழிகாட்டலிலுள்ள ஒற்றுமையை வெளிக்கொணர்வதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். இவ்வாய்வுக்காக திருக்குறளும் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களும் முதன்மைத்தரவுகளாகப் பயன்னடுத்தப்பட்டுள்ளதோடு விவரணப்பகுப்பாய்வு முறை பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பியல் நோக்கில் திருக்குறள் மற்றும் அல்குர்ஆனைத ஆய்வு செய்பவர்களுக்கும் மனைவியின் அணிகலன்களை அறிந்து கொள்ள எத்தணிப்பவர்களுக்கும் சமயப் போதனைகளுக்கு அமைவாக திருமணத்திற்காக எவ்வாறான பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என முயற்சிப்பவர்களுக்கும் இவ்வாய்வு வழிகாட்டியாக அமையும்.
</description>
<dc:date>2023-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14438">
<title>வியாபாரப் போட்டிக்கான வரையறைகளும் ஒழுங்குகளும் - ஓர் இஸ்லாமியப் பார்வை</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14438</link>
<description>வியாபாரப் போட்டிக்கான வரையறைகளும் ஒழுங்குகளும் - ஓர் இஸ்லாமியப் பார்வை
Mujahid, ALM
இவ்வாய்வானது வியாபாரப் போட்டிக்கான இஸ்லாத்தின் வரையறைகளையும் ஒழுங்குகளையும் தெளிவுபடுத்துவதை இலக்காக கொண்டுள்ளது. இஸ்லாம் வியாபாரத்தில் விசேட கவனம் செலுத்துவதோடு மகிழ்ச்சியை ஈட்டித்தரும் வகையில் நல்ல பல திட்டங்களையும் வகுத்துத் தந்;துள்ளது. மோசடி, ஏமாற்று,  கள்ளத்தனமான போட்டி, பதுக்கல், வியாபாரப் பொருட்களை சந்தைக்கு கொண்டுவராது நெருக்கடியை ஏற்படுத்தல் போன்ற கேள்வியை அதிகரிக்கச் செய்யும் வியாபாரப்போட்டி முறைகளில் இருந்து விடுபட்டு சீரான அடித்தளத்தில் அமைந்த சந்தைகளையே இஸ்லாம் வரவேற்பதோடு அதற்குரிய வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது. இதன்படி இம்மார்க்கத்தின் இலக்கானது பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளால் மாற்றமுறும் வியாபாரப்போட்டி நிலைமைகளுக்கேற்றவாறு கேள்விக்கும் கையிருப்புக்கும் ஏற்ப நீதமான விலையை நிர்ணயம் செய்தலாகும். இதற்காக இவ்வாய்வு பின்வரும் அம்சங்களை பரிந்துரை செய்கின்றது. எமது அன்றாட கொடுக்கல் வாங்கல் அனைத்திலும் இஸ்லாத்தின் வரையறைகள், விதிகளைப் பேணல், கண்காணிக்கும் பணியில் இருப்பவர்களிடம் விசேட சிறப்பம்சங்களும் நிபந்தனைகளும் நிறையப்பெற்றிருத்தலின் அவசியத்தை உணர்த்துதல், பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையைத் தீர்மானித்தல். வியாபார நடவடிக்கைகளில் மக்களுக்கு அநியாயம் செய்து சதி, மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தல், பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலுமே இஸ்லாமிய சரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்தி கண்காணித்தல். இவ்வாய்வு வியாபாரப் போட்டிக்கான வரையறைகள் என்ன?,  இஸ்லாம்  அதற்கு வகுத்துள்ள ஒழுங்குகள் யாவை? என்ற இரண்டு பிரதான வினாக்களுக்கு விடையளிக்க முனைகிறது.
</description>
<dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14437">
<title>அரபு இலக்கியக் கவிதைகளின் தோற்றமும் பொருள் மரபும் - ஓர் ஆய்வு</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14437</link>
<description>அரபு இலக்கியக் கவிதைகளின் தோற்றமும் பொருள் மரபும் - ஓர் ஆய்வு
Mujahid, ALM
அரபுக் கவிதைகள் எக்காலப்பகுதியில் முதன்முதலில் தோன்றின என்று அறிவதற்கு போதிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லையாயினும், தனித்தனி கவிதைகள் மிக ஆரம்ப காலத்திலே தோன்றியிருக்க முடியும்.  ஆயினும் அப்துல் முத்தலிப் காலத்தில்தான் கஸீதாக்களின் உருவில் அரபுமொழியில் கவிதைகள் தோன்றியிருக்க முடியும் என்று ர்யுசு. கிப் என்பவர் தனது அரபு இலக்கியம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.  இதன்படி கி.பி ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டளவில் கவிதைகள் தோன்றின என்று கருத இடமுண்டு.  இக்காலத்தில் தோன்றிய கவிதைகளின் மொழிநடை, பொருளமைதி, இலக்கிய மரபு, சொல்வளம் என்பவற்றை கொண்டிருப்பதானது இவை நீண்ட கால வளர்ச்சியின் பின் தோன்றியவை என்று கருத இடமளிக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு அரபுக் கவிதைகளின் தோற்றமும் பொருள் மரபும் எனும் பொருண்மையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
</description>
<dc:date>2020-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14436">
<title>ஐம்புலன் அடக்கத்தில் நாவடக்கம் - ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14436</link>
<description>ஐம்புலன் அடக்கத்தில் நாவடக்கம் - ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
Mujahid, ALM; Mujahid, ALM
எமது உடல் உறுப்புக்கள் அனைத்தும் இறைவனால் எமக்கு வழங்கப்பட்ட மாபெரும் அருட்கொடைகளாகும். ஐம்புலன்களை எமது இச்சைப்படி பயன்படுத்த முடியுமாக இருந்தாலும் அவற்றை வரையறைகள், கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்துவதே மனித வாழ்வு பண்பட, செம்மைப்படுத்த சிறந்த வழியாக அமையும். மனிதனுக்குள்ள அவயவங்களிலே நா மிக முக்கியமானதாகையால்தான் இறைவன் மனிதனையும் மிருகத்தையும் வேறுபடுத்தியுள்ளான். ஆகவே மனிதன் நாவைக் காத்தல் விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இன்று குடும்பங்களை சிதைத்து, ஊர் ஒற்றுமையைக் குழப்பி, முழு மனித சமூகத்தின் நிம்மதியையும் இல்;லாமல் செய்யும் அனைத்துப் பிரச்சினைகளும் நாவு மூலமே நடந்தேறி வருகின்றன. &#13;
இதுவரை உலகில் தோன்றிய அனைத்துவிதமான சமய கோட்பாடுகளும், சித்தாந்தங்களும் புராண இதிகாசங்களும் நாவடக்கம் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. நாவைப் பேணும் விடயத்தில் திருக்குறள் பின்வருமாறு கூறுகிறது. &#13;
'தீயினாற் சுட்டபுண் உள்ஆறும்; ஆறாதே &#13;
நாவினாற் சுட்ட வடு'  &#13;
தீயினால் சுடப்பட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் சுட்ட வடுவானது ஒரு போதும் மறையாது.&#13;
'யாகாவார் ஆயினும் நா காக்க் காவாக்கால் &#13;
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு' &#13;
ஒருவர் எவற்றை அடக்காவிட்டாலும் நாக்கு ஒன்றையாவது தீய சொற்களைப் பயிலாமல் அடக்கியாள வேண்டும். அங்ஙனம் அடக்கியாளாவிட்டால் பேசும் பொழுது சொற்குற்றத்திற்கு ஆளாகிப் பெரிதும் துன்பப்படுவர்.&#13;
'வில்லம்பை விட சொல்லம்பு வலிமையானது' &#13;
என்று ஒரு அரபுப் பழமொழியும் உண்டு. விட்ட அம்பையும் பேசிய சொல்லையும் மீளப்பெற முடியாது. எனவேதான் நாவைப் பேணுகின்ற விடயத்தில் இஸ்லாம் அதிக கவனத்தைச் செலுத்தியிருக்கின்றது. நாவடக்கம், நாவைப்பேணுதல் போன்ற விடயங்கள் ஹதீஸ்களில் எவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளன என்று அறிந்து கொள்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
</description>
<dc:date>2020-01-01T00:00:00Z</dc:date>
</item>
</rdf:RDF>
