<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF xmlns="http://purl.org/rss/1.0/" xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<channel rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4191">
<title>தொகுதி: 6,  எண்: 1</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4191</link>
<description/>
<items>
<rdf:Seq>
<rdf:li rdf:resource="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4287"/>
<rdf:li rdf:resource="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4286"/>
<rdf:li rdf:resource="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4284"/>
<rdf:li rdf:resource="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4282"/>
</rdf:Seq>
</items>
<dc:date>2026-04-21T16:54:22Z</dc:date>
</channel>
<item rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4287">
<title>தேவை கோட்பாடு பற்றிய மார்க்ஸிய நோக்கும் மனித ஆற்றலில் அதன் பங்கும்</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4287</link>
<description>தேவை கோட்பாடு பற்றிய மார்க்ஸிய நோக்கும் மனித ஆற்றலில் அதன் பங்கும்
முபிஸால் அபூபக்கர்
மனித உருவாக்கத்தில் தேவைகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.&#13;
விலங்குகள் உயிர் வாழ்வதற்கான வழிகளை பெரும்பாலும் தமது&#13;
உடல்களிலும், உடனடி சுற்றுச் சார்புகளிலும் கொண்டுள்ளன. சில&#13;
விலங்குகள் தம் சூழலில் உள்ள தாவரங்களை மட்டும் உண்டு உயிர்&#13;
வாழ்கின்றன. தாவரங்கள் அழிகின்றபோது அவையும் அழிகின்றன.&#13;
ஆனால் விலங்குகளோடு ஒப்பிடும்போது மனிதர் பலவீனமானவர்.&#13;
தமது தேவைகளுக்கான சாதனங்களை தாமே படைக்கவேண்டிய&#13;
தேவை அவர்களுக்கு மட்டுமேயுள்ளது.&#13;
மனிதரது தேவையுடன் தொடர்புபட்டே மனிதரது தனிப்பட்ட&#13;
வாழ்வும், வரலாற்று ரீதியான வாழ்வும் தொடங்குகின்றன. தேவைகளைப்&#13;
பூர்த்தி செய்யவே உழைப்பும் கருவிகளும் கண்டு பிடிக்கப்பட்டன.&#13;
மானிடத் தேவையென்பது ஒரு செயல், உறவுச் செயல். அது&#13;
இயற்கையுடனும் இதர மனிதர்களுடனும் புறப்பொருட்களுடனும் மனிதர்&#13;
கொண்டுள்ள ஒரு சிக்கலான உறவு என்பதையே மார்க்ஸிய சிந்தனை&#13;
உணர்த்துகின்றது.
</description>
<dc:date>2019-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4286">
<title>இந்துச்சட்ட மூலங்களில் விவாகரத்துக் குறித்த கருத்தாடல்கள்</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4286</link>
<description>இந்துச்சட்ட மூலங்களில் விவாகரத்துக் குறித்த கருத்தாடல்கள்
ச. முகுந்தன்
நான்கு வேதங்கள், பதினெண் ஸ்மிருதிகள், (தர்மசாஸ்திரங்கள்),&#13;
அர்த்த சாஸ்திரம், பதினெண் ஸ்மிருதிகளுக்குப் பிற்காலத்தில் செய்யப்&#13;
பட்ட உரைகள் ஆகியவற்றை இந்துச் சட்ட மூலங்கள் எனக் கொள்வது&#13;
மரபாகும்.&#13;
இந்துக்களின் பேரிதிகாசங்களும் பதினெண் மகாபுராணங்களும்&#13;
பிரதிபலிக்கின்ற சமூகவாழ்வியல் நெறிமுறைகள் மேற்குறித்த இந்துச்&#13;
சட்டமூலங்களை அடியொற்றிக் கட்டமைக்கப்பட்டவையேயாகும்.&#13;
எவ்வாறாயினும் 'இந்து' என்ற கருத்துருவாக்கத்தில் இவை மட்டும்&#13;
உள்ளடங்கவில்லை. அகன்ற பரதகண்டத்தில் (இதுவே பிற்காலத்தில்&#13;
பாரதம் ஆயிற்று) வாழ்ந்த பல்வேறு இனக்குழுக்கள், பழங்குடிகள்&#13;
ஆகியவற்றின் சமூக வழக்காறுகள், கால்வழிமரபுகள் உள்ளிட்ட பரந்த&#13;
பண்பாட்டு வாழ்வியற் புலங்களின் விகசித்த இணைப்பையே அது&#13;
சுட்டி நிற்கின்றது. எனவே 'இந்து' என்ற ஒற்றைச் சொல்லை வெறுமனே&#13;
பாரசீகரின் சுட்டுச் சொல்லாகவோ அன்றி வைதிக பௌராணிக&#13;
சமயபண்பாட்டுப் புலமாகவோ ஒற்றைப் பரிமாணமாகக் கருத்துவிளக்கம்&#13;
செய்வதும் பொருத்தமற்றதோர் அணுகுமுறையேயாம்.
</description>
<dc:date>2019-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4284">
<title>திரைப்படக் கலை - ஓர் பின்நவீனத்துவ ஆய்வு</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4284</link>
<description>திரைப்படக் கலை - ஓர் பின்நவீனத்துவ ஆய்வு
இரத்தினசபாபதி பிறேம்குமார்
திரைப்படம் தற்காலத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற ஒரு கலை&#13;
வடிவமாக விளங்கி வருகிறது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப&#13;
வளர்ச்சிகளின் மொத்த உருவமாக இந்த வடிவம் காணப்படுகிறது.&#13;
பாரம்பரியமாக மக்கள் மத்தியில் வழக்கில் இருந்து வருகின்ற கலை&#13;
வடிவங்களான ஓவியம், நாடகம், சிற்பம், இன்னும் பல., என்பவற்றைக்&#13;
காட்டிலும் வேறுபட்ட பல தனித்துவ அம்சங்களைக் கொண்டதாக&#13;
இந்த கலை வடிவம் காணப்பட்டு வருகின்றது. திரைப்படம் என்பதை&#13;
குறிப்பதற்கு ஆங்கிலத்தில் பல்வேறு பதங்கள் பயன்படுத்தப்பட்டு&#13;
வருகின்றன. அவற்றுள் ஷசினிமா| (உiநெஅய) என்பது முதன்மையானது.&#13;
ஷசினிமா| (உiநெஅய) என்ற ஆங்கிலப்பதம் கிரேக்க மொழியில் இருந்து&#13;
வருகின்றது. இதன் அர்த்தம் 'அசைவு' என்பதாகும். இதே போல்&#13;
திரைப்படத்தைக் குறிக்கும் மற்றுமொரு ஆங்கிலப்பதமாக ஷமூவி|&#13;
(அழஎநை) காணப்படுகிறது. இது அசையும் படங்கள் (அழஎiபெ piஉவரசநள)&#13;
என்ற தொடரின் சுருக்க வடிவமாக கருதப்படுகிறது. இதே போல்&#13;
திரைப்படத்தை குறிக்கும் மற்றுமொரு ஆங்கிலப்பதமாக ஷபிலிம்| (கடைஅ)&#13;
காணப்படுகின்றது. இது திரைப்படம் உருவாக்கப்படும் படச்சுருளுடன்&#13;
தொடர்புடையதாக காணப்படுகின்றது. திரைப்படத்தினை குறிக்க மேலே&#13;
குறிப்பிட்ட பல வார்த்தைகள் காணப்பட்டாலும், 'திரைப்படம்' என்ற&#13;
வார்த்தை அதிக புரிதலையும் பயன்பாட்டினையும் மக்கள் மத்தியில்&#13;
கொண்டிருப்பதன் காரணமாக திரைப்படம் என்ற சொல்லே இக்கட்டுரை&#13;
முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது. திரைப்படம் பொதுமக்கள் மத்தியில்&#13;
கலை வடிவம் என்ற தகுதியினை பெற்றுக் கொண்ட போதும் அழகியல்&#13;
மெய்யியலாளர்களில் ஒரு சாரார் அதனை கலை வடிவமாக ஏற்றுக்&#13;
கொள்ள முடியாது என வாதிட, மற்றுமொரு சாரார் இதனை கலை&#13;
வடிவமாக ஏற்றுக் கொள்ளலாம் என வாதிடுகின்றனர். இந்த இரு&#13;
சாராரின் வாதங்களும் கலைக்குரிய பண்பினை திரைப்படங்கள் பூர்த்தி&#13;
செய்கின்றதா? என்ற பிரச்சினையினை மையமாகக் கொண்டதாக&#13;
உள்ளது. திரைப்படம் ஒரு கலை வடிவமா? அல்லது இல்லையா?&#13;
என்ற பிரச்சினையினை இக்கட்டுரை திரைப்படமும் அதன் வகைப்&#13;
படுத்தல்களும், திரைப்படமும் தொழில்நுட்பமும், திரைப்படமும்நோக்கமும், திரைப்படமும் இரசிகர்களும் என்ற பரிமாணங்களில்&#13;
ஆராய்வதுடன் பின்நவீனத்துவ நோக்கில் இப்பிரச்சினை தொடர்பான&#13;
கருத்துக்களை முன்வைக்கின்றது.
</description>
<dc:date>2019-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4282">
<title>வெருகல் சித்திரவேலாயுதர் காதல்: ஆக்கக் கூறுகளும் வரலாற்றுப் பதிவுகளும்</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4282</link>
<description>வெருகல் சித்திரவேலாயுதர் காதல்: ஆக்கக் கூறுகளும் வரலாற்றுப் பதிவுகளும்
சின்னத்தம்பி சந்திரசேகரம்
கிழக்கிலங்கைச் சைவத் தலங்கள் மீது பாடப்பட்ட பிரபந்தங்களில்&#13;
வெருகல் சித்திரவேலாயுதர் காதல் முதன்மையானதும் பழமையானதுமான&#13;
நூலாகக் கருதப்படுகின்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் கிழக்கிலங்கைத்&#13;
தேசத்துக் கோயிலாகக் கொள்ளப்படுவதுமான வெருகல் சித்திரவேலாயுதர்&#13;
கோயிலின் சிறப்புக்களையும் அங்கு எழுந்தருளியுள்ள முருகக்&#13;
கடவுளின் பெருமைகளையும் பாடுவதை நோக்காகக் கொண்டது&#13;
இந்நூல்.
</description>
<dc:date>2019-01-01T00:00:00Z</dc:date>
</item>
</rdf:RDF>
