<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF xmlns="http://purl.org/rss/1.0/" xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<channel rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4277">
<title>தொகுதி: 5, எண்: 2</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4277</link>
<description/>
<items>
<rdf:Seq>
<rdf:li rdf:resource="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4297"/>
<rdf:li rdf:resource="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4296"/>
<rdf:li rdf:resource="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4295"/>
<rdf:li rdf:resource="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4294"/>
</rdf:Seq>
</items>
<dc:date>2026-04-08T00:26:38Z</dc:date>
</channel>
<item rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4297">
<title>அகநானூற்றுக்கு எழுந்த ஈழத்து, தமிழகத்து உரைகள் கணேசையரின் அகநானூற்றுரையையும் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் அகநானூற்றுரையையும் முன்னிறுத்திய ஓர் உசாவல்</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4297</link>
<description>அகநானூற்றுக்கு எழுந்த ஈழத்து, தமிழகத்து உரைகள் கணேசையரின் அகநானூற்றுரையையும் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் அகநானூற்றுரையையும் முன்னிறுத்திய ஓர் உசாவல்
பெருமாள் சரவணகுமார்
சங்க இலக்கியப் பிரதிகளுக்கான உரையாக்கப் புலமைச் செயற்பாடுகள்&#13;
தமிழகத்திலும், ஈழத்திலும் நடைபெற்று வந்துள்ளன. சங்க இலக்கிய&#13;
உரைகளின் வரலாற்றை நோக்கும்போது, உரையாசிரியர்கள் காலம்&#13;
என்று அடையாளப்படுத்துகின்ற கி.பி. 10ஆம் நூற்றாண்டு தொடக்கம்&#13;
கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரையான காலமே முதன்மை இடம்&#13;
பெறுகின்றது. இக்காலப்பகுதியிலேயே தமிழ்ப் பண்பாட்டில் உரையாக்க&#13;
மரபு என்பது ஓர் உப பண்பாட்டு இலக்கியப் பாரம்பரியமாக உருவானது.&#13;
18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகமான அச்சுப் பண்பாடும்&#13;
அதனூடாக நிகழ்த்தப்பட்ட நூல் பதிப்பியல் செயற்பாடுகளும் சங்க&#13;
இலக்கியம் பற்றிய வாசிப்புகளுக்கும், தமிழ்ச் சமுதாயத்தின் வரலாற்&#13;
றைக் கட்டமைப்பதற்கும் அடிப்படையாக அமைந்தன. பழந்தமிழ்&#13;
இலக்கியப் பிரதிகளான சங்க இலக்கியங்களை சமகால வாசிப்பு&#13;
வெளிக்குள் கொண்டுவருவதற்கான உரைமுயற்சிகளும் பல நிலைகளில்&#13;
மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப்&#13;
பகுதியிலிருந்து இவ்வகை உரையாக்கங்கள் வெளிவந்தன. அவ்வகையில்&#13;
வெளிவந்த உரைகளுள் சி. கணேசையரின் உரைகளும், வேங்கடசாமி&#13;
நாட்டாரின் உரைகளும் மிக முக்கியமானவை. சி. கணேசையரின் அக&#13;
நானூற்று – களிற்றியானைநிரையுரையையும், வேங்கடசாமி நாட்டாரின்&#13;
அகநானூற்று – களிற்றியானைநிரையுரையும் ஒப்பிட்டு ஆராய்வதாக&#13;
இவ்வாய்வு அமைகின்றது. சங்க இலக்கியப் பிரதிகளுக்கு எழுதப்பட்ட&#13;
உரைகளின் வரலாற்றில் ஈழத்து உரைமரபினையும், தமிழ்நாட்டு உரை&#13;
மரபினையும் கோடிட்டுக் காட்டுவதாக இவ்வாய்வு அமைகின்றது.
</description>
<dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4296">
<title>காலனித்துவ, பின்காலனித்துவ கருத்தியலுக்குள் பழங்குடியினரின் கலைகள்</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4296</link>
<description>காலனித்துவ, பின்காலனித்துவ கருத்தியலுக்குள் பழங்குடியினரின் கலைகள்
வடிவேல் இன்பமோகன்
ஒரு நாடு தனது அதிகாரத்திற்கு உட்படுத்திய நாடுகளை ஆளுகைக்குட்&#13;
படுத்துவதற்கான அமைப்புமுறை காலனித்துவமென அழைக்கப்படும்.&#13;
காலனித்துவத்திற்கு உட்படுத்தப்பட்ட நாடுகளின் மூலமாக பொருளாதார&#13;
ரீதியான நன்மைகளைப் பெறுவதே இதன் பிரதான நோக்கமாகும்.&#13;
காலனித்துவம் நாடுகளை ஆட்சி செய்வதற்காக சுய நிர்ணயப்படுத்தப்பட்ட&#13;
உரிமையை (ளுநடக-யிpழiவெநன சiபாவ) பிரயோகித்தது. இது நீதியின் மூலமே&#13;
நிறைவேற்றப்பட்டது.&#13;
காலனித்துவம் மிகவும் நீண்ட காலப்பகுதியைக் கொண்டதுதொரு&#13;
அதிகாரச் செயற்பாடாக அமைந்திருந்தது. ஆனால் காலனித்துவத்தில்&#13;
இருந்து விடுபட்டு நீண்டகாலத்தைத் தாண்டியபோதும் காலனித்துவம்&#13;
ஏற்படுத்திய விளைவுகள் தற்காலத்திலும் மக்களிடையே உள்ளது.&#13;
இது காலனித்துவத்தின் பாதிப்புக்களில் இருந்து மக்கள் விடுபடாத&#13;
நிலையினையே குறிக்கின்றது. தற்காலத்தில் உருவாக்கப்படும்&#13;
கலையிலும் காலனித்துவத்தின் பாதிப்புக்களை இனங்காணமுடியும்.&#13;
உலகமயமாக்கல், பின்காலனித்துவம் அல்லது நவ காலனித்துவம்&#13;
என்பனவற்றின் தாக்கத்தை வைத்துக் கொண்டு நோக்கும் போது&#13;
காலனித்துவம் மிகவும் உறுதியான செயற்பாடாக காணப்பட்டது&#13;
என்பதை விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது.
</description>
<dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4295">
<title>குறிப்பு வினை பற்றிய ஒரு விசாரணை</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4295</link>
<description>குறிப்பு வினை பற்றிய ஒரு விசாரணை
சி. சிவசேகரம்
1. இருப்பைக் குறிக்கும் வினைச்சொல்&#13;
வாக்கியங்கள் பொதுவாகப் பொருளையோ செயலையோ குறிப்பன.&#13;
இங்கு, பொருளென்பது பண்டங்களை மட்டுமன்றிச் சீவராசிகளையும்&#13;
உணர்வுகளையும் பண்புகளையுங் குறிக்கும். நிகழ்வென்பது எண்ணம்&#13;
உட்படப் பல்வகைச் செயல்களை உணர்த்தும்.&#13;
ஒரு செயலைக் கூற வினைச்சொல் தேவை. ஒன்றின் இருப்பை&#13;
உணர்த்த வினைச்சொல் கட்டாயமில்லை. எனினும், ஒரு பொருள்&#13;
முன்னர் இருந்தது எனவோ இனி இருக்கும் எனவோ கூற ஒரு&#13;
வினைச்சொல் தேவைப்படலாம்.&#13;
பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளில், ஒரு பொருளின்&#13;
இருப்பைக் குறிக்கும் வினைச்சொல் (ஆங்கிலத்தில் ளைஇ யஅஇ யசந&#13;
என்றவாறு) உள்ளது. அம் மொழிகளில், ஒரு பொருளைக் குறிக்கும்&#13;
வாக்கியத்துக்கு அது அவசியம்.
</description>
<dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4294">
<title>ஈழத்து அரங்கில் பண்பாட்டு ஊடாட்டம் 1970 தொடக்கம் இன்றைய சமகால அரங்கப் போக்குகள் வரை உள்ளடக்கிய ஓர் ஆய்வு</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4294</link>
<description>ஈழத்து அரங்கில் பண்பாட்டு ஊடாட்டம் 1970 தொடக்கம் இன்றைய சமகால அரங்கப் போக்குகள் வரை உள்ளடக்கிய ஓர் ஆய்வு
க. சிதம்பரநாதன்
ஈழத்தமிழ் அரங்கப் பண்பாடு வளமானது. பல்லாயிரக்கணக்கான&#13;
மக்கள் ஒன்றுகூடி ஆற்றுகையில் ஈடுபட்டு தம்மை வழிப்படுத்தும்&#13;
அரங்கப் பண்பாட்டை ஈழத்தமிழ் சமூகம் கொண்டிருக்கிறது. போரின்&#13;
பின்னர் ஈழத்தமிழ் சமூகம் பண்பாட்டு நெருக்கடிகளில் சிக்குண்டுள்ளது.&#13;
இந்த நெருக்கடியை அரங்கவியலாளர்கள் எவ்வாறு எதிர்கொள்வது?&#13;
என்ற அக்கறையின்  வெளிப்பாடே இந்த ஆய்வு எடுத்துரைப்பு&#13;
&#13;
இன்று உலகமயமாதல் போக்கு நிலவுகின்றது. சமூகங்கள் திறந்து&#13;
விடப்பட்டுள்ளன. பிற பண்பாடுகள் உள்நுழைகின்றன. இன எண்ணக்கரு&#13;
சிதைந்து இனத்தின் பண்பாட்டு அடையாளங்கள் சிதைந்து போகின்றன.&#13;
நுகர்வுப் பண்பாட்டிற்கேற்ப பண்பாட்டுப் பண்டங்களை உற்பத்தி&#13;
செய்வதில் பல் தேசியக் கம்பனிகள் முனைப்பாக உள்ளன.
</description>
<dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
</item>
</rdf:RDF>
