Abstract:
நபி (ஸல்) அவர்கள், நபித்தோழர்கள், தாபியீன்கள் ஆகியோர்கள் அல்குர்ஆன் விரிவுரைக்கு கொடுத்த முக்கியத்துவமானது அல்குர்ஆன் பற்றிய சந்தேக நிலை சமூகத்திலிருந்து கலையப்படுவதற்கும், அதன் முக்கியத்துவம் உணரப்படுவதற்கும் அடித்தளமிட்டுள்ளது. இன்றைய நவீன சூழலில் அல்குர்ஆன் விரிவுரையின் அவசியத்தையும் பயன்பாடையும் தெளிவுபடுத்துதல் இவ்வாய்வின் நோக்கமாகும்.
பண்பு ரீதியான ஆய்வு முறையிலமைந்த இவ்வாய்வு, முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளை மையப்படுத்தியுள்ளது. இதன்படி இஸ்லாமிய வரலாற்றில் இக்கலையானது நபி (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து தோற்றம் பெற்றதோடு, அவர்களே முதன்மை முபஸ்ஸிராகவும் காணப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருந்தபோது அல்குர்ஆன் தொடர்பாக ஏற்பட்ட சந்தேகங்களை வஹியின் துணை கொண்டு தெளிவுபடுத்தினார்கள். அவர்களின் மறைவின் பின்னர் அடுத்த தலைமுறையினரான ஸஹாபாக்கள் காலத்தில் பல புதிய பிரச்சினைகள் தலைதூக்கியது. இதனால் அல்குர்ஆனின் புனிதத் தன்மைக்கு முரண்படாத அமைப்பில் விளக்கங்களை முன்வைத்தார்கள். இவர்களில் முதல் நான்கு கலீபாக்கள்,
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி), அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரழி)
போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அனைவரும் அல்குர்ஆன் வசனங்கள் இறங்கிய பின்னணி, அவற்றின் உட்பொருள் என்பன பற்றிய பூரண விளக்கத்தினைப் பெற்றிருந்தனர். ஸஹாபாக்களுக்கு அடுத்து வந்த பரம்பரையினரைப் பொருத்தவரையில், ஸஹாபாக்கள் விளக்கம் கூறாது விட்டுச்சென்ற வசனங்களுக்கு விளக்கவுரைகள் அவசியப்பட்டன. இதற்குப் பங்காற்றியவர்களாக ஸஈத் இப்னு ஜூபைர், முஜாஹித், இக்ரிமா, தாவூஸ், அதாஃ போன்ற தாபிஈ அறிஞர்கள் இக்கலையை வளர்த்தனர். நவீன காலத்தில் தொழில்நுட்ப சாதனங்களின் விருத்தியின் காரணமாக தப்ஸீர் கலை புதிய பரிணாமமெடுத்துள்ளது. சாதாரணமாக, ஒரவரால் தேடியறிந்து கொள்ள சிரமப்படும் பல்துறை சார், பல கலை சார்ந்த
தப்ஸீர்களையும் இன்றைய சூழலில் மனிதனுக்கு கணிணியின் வாயிலாக
பெற்றுக்கொள்ள முடியும். இருவட்டுக்கள் மூலமும், வலைபிண்ணலின் ஊடாகவும் தான் விரும்பும் அல்குர்ஆன் விளக்கவுரைகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக உள்ளது.
எனவே, அல்குர்ஆன் பற்றிய சந்தேகங்களை இல்லாதொழிப்பதற்கான
முன்னெடுப்புக்கள், அதற்கான வழிகாட்டல்கள் பற்றிய ன்மொழிவுகளைத்
தருவதாகவும், எதிர் காலத்தில் இவ்விடயத்தில் ஆய்வை ற்கொள்வோருக்கு
உதவுவதாகவும் இவ்வாய்வு அமைகிறது.