முஸ்லிம் பெண்தாதியர்கள் பணிச்சூழலில் எதிர்நோக்கும் சவால்கள் : சம்மாந்துறைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு

Show simple item record

dc.contributor.author Mujahid, A. L. M.
dc.date.accessioned 2026-06-25T05:52:27Z
dc.date.available 2026-06-25T05:52:27Z
dc.date.issued 2025
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/17765
dc.description.abstract இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசமானது குறிப்பிடத்தக்களவு முஸ்லிம் பெண் தாதியர்களை சுகாதாரத் துறைக்கு வழங்கும் ஒரு முக்கிய பிரதேசமாகக் காணப்படுகின்றது. இப்பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் தாதியர்கள் தமது தொழில்சார் சூழலிலும் சமூக மற்றும் குடும்ப வாழ்விலும் எதிர்நோக்கும் பன்முகப்படுத்தப்பட்ட சவால்களை விரிவாக ஆராய்வதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். இவ்வாய்வானது பண்புசார் மற்றும் அளவுசார் (Mixed Method Research) அணுகு முறைகளை ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுத் தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக எழுமாற்று மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 30 பெண் தாதியர்களுக்கு வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டதோடு, ஆழமான புரிதலுக்காக 10 தாதியர்களிடம் நேர்காணல்களும் மேற்கொள்ளப்பட்டன. சேகரிக்கப்பட்ட தரவுகள் Excel மென்பொருள் உதவியுடனும், பண்புசார் தரவுகள் கருப்பொருள் பகுப்பாய்வு (Thematic Analysis) முறையினூடாகவும் வகைப்படுத்தப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆய்வின் பிரதான கண்டறிதல்களின்படி, முஸ்லிம் பெண் தாதியர்கள் தமது பணி நிலையங்களில் இஸ்லாமிய வரையறைகளுக்குட்பட்ட முழுமையான ஆடை முறையைப் பின்பற்றுவதில் பாரிய தடைகளை எதிர்நோக்குகின்றனர். இது அவர்களது தனிப்பட்ட மன உளைச்சலுக்குக் காரணமாக அமைவதுடன், சமூக ரீதியான எதிர்மறை விமர்சனங்களுக்கும் உள்ளாக்குகின்றது. மேலும், சுழற்சி முறையிலான இரவு நேரப் பணிகள் அவர்களது குடும்ப வாழ்வியலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கணவன் மற்றும் பிள்ளைகளுடன் செலவழிக்க வேண்டிய நேரத்தைக் குறைத்துள்ளதோடு, பிள்ளைகளின் கல்வி மற்றும் ஒழுக்க மேம்பாட்டில் போதிய கவனம் செலுத்த முடியாமையையும் தோற்றுவித்துள்ளது. தொழில் ரீதியாக, பண்டிகைக் கால மற்றும் அவசர கால விடுமுறைகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள நிர்வாகச் சிக்கல்கள், சுகயீனமான நிலையிலும் சேவையாற்ற வேண்டிய கட்டாயச் சூழல் மற்றும் பணிச்சுமையால் அடிப்படை மார்க்கக் கடமைகளை உரிய நேரத்தில் நிறைவேற்ற முடியாமை போன்ற விடயங்கள் இவர்களது பணித்திருப்தியைப் பாதிக்கும் காரணிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, சம்மாந்துறை பிரதேச முஸ்லிம் பெண் தாதியர்கள் தமது மார்க்க விழுமியங்களுக்கும் தொழில்சார் பொறுப்புகளுக்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுவதில் பெரும் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர் என்பதை இவ்வாய்வு புலப்படுத்துகின்றது. en_US
dc.language.iso ta en_US
dc.publisher International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) en_US
dc.subject முஸ்லிம் பெண் தாதியர்கள் en_US
dc.subject சுகாதாரத் துறை en_US
dc.subject தொழில்முறை சவால்கள் en_US
dc.subject மதக் கடமைகள் en_US
dc.subject பணித் திருப்தி en_US
dc.subject சம்மாந்துறை en_US
dc.title முஸ்லிம் பெண்தாதியர்கள் பணிச்சூழலில் எதிர்நோக்கும் சவால்கள் : சம்மாந்துறைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு en_US
dc.type Working Paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account