கஸ்ர பிரதேச பாடசாலைகளின் கனிஸ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் நிகழ்நிலைக்கற்றல் ஏற்படுத்தும் தாக்கம்

Show simple item record

dc.contributor.author ரேகாசலன், பேரின்பராசா
dc.date.accessioned 2024-03-06T04:34:49Z
dc.date.available 2024-03-06T04:34:49Z
dc.date.issued 2023
dc.identifier.citation MED324 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15085
dc.description.abstract கஸ்ர பிரதேச பாடசாலைகளின் கனிஸ்ட இடைநிலைப்பிரிவு மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் நிகழ்நிலைக்கற்றல் ஏற்படுத்தும் தாக்கம்." (மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மண்முனை தென்மேற்குக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட 1AB,Type 11 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) கொரோனா நோய்த்தாக்கத்தினால் பாடசாலைக்கல்வி கிடைக்கப்பெறாத நிலையினால் இப்பிரதேசப் பாடசாலைகளிலே நிகழ்நிலைக்கற்றலில் பின்தங்கிய நிலை தோன்றுகின்றது. இதனடிப்படையிலேயே "கஸ்ர பிரதேச பாடசாலைகளின் கனிஸ்ட இடைநிலைப்பிரிவு மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் நிகழ்நிலைக்கற்றல் ஏற்படுத்தும் தாக்கத்தினை கண்டறிதல்" எனும் ஆய்வு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்விற்காக ஆய்வு மாதிரிகளாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாய்விற்கென தெரிவு செய்யப்பட்ட Sபாடசாலைகள் நோக்கமாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டமைக்கு அமைவாக அதிபர்களும் தெரிவு செய்யப்பட்டனர். ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் படிமுறை எழுமாற்று மாதிரி மூலம் தெரிவு செய்யப்பட்டு பின்பு எளிய எழுமாற்று மாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். ஆய்விற்கான தரவுசேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல் அவதானம் ஆகியன பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலமாகப்பெறப்பட்ட தரவுகள் அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள் பொருத்தமான மென்பொருள் முறைகளினூடாக பகுப்பாய்வு. வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படுகின்றன. பகுப்பாய்வு மூலம் பல்வேறு முடிவுகளைக் கண்டறிய முடிகின்றது. மண்முனைதென்மேற்கு கோட்டத்திலே கனிஸ்ட இடைநிலை வகுப்புக்களில் நிகழ்நிலைக்கற்றல் சார் இடர்பாடுகள் பாரிய தாக்கத்தினைச் செலுத்துகின்றது. இத் தாக்கமானது பாடசாலைகளின் அடைவு மட்டத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. அதாவது இப்பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தியில், பரீட்சைகளின் அடைவுமட்டங்கள் குறைதல் கற்றல் சூழல் பாதிப்படைதல், பாடசாலைகள் குறித்த இலக்கினை அடையமுடியாமை போன்ற பல்வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது எனக்கண்டறியப்பட்டதோடு, இது தொடர்பில் பல பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு, இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விதப்புரைகளும் இவ் ஆய்வினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka en_US
dc.subject கனிஸ்ட இடைநிலைப்பிரிவு நிகழ்நிலைக்கற்றல் en_US
dc.subject கஸ்ர பிரதேசம் en_US
dc.subject பாடசாலை en_US
dc.subject கற்றல் en_US
dc.title கஸ்ர பிரதேச பாடசாலைகளின் கனிஸ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் நிகழ்நிலைக்கற்றல் ஏற்படுத்தும் தாக்கம் en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account