தரம் 06 மாணவர்களின் எழுத்துத்திறன் விருத்தி கற்றலில் ஏற்படுத்தும் தாக்கம்

Show simple item record

dc.contributor.author ஹாழிறா, அஸீஸ் பாத்தும்மா
dc.date.accessioned 2024-04-08T05:53:12Z
dc.date.available 2024-04-08T05:53:12Z
dc.date.issued 2023
dc.identifier.citation fac1147 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15363
dc.description.abstract 'தரம் 6 மாணவர்களின் எழுத்துத்திறன் விருத்தி கற்றலில் ஏற்படுத்தும் தாக்கம்" என்ற தலைப்பில் அமைந்த இவ்வாய்வானது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஏறாவூர்க் கல்விக் கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை மையப்படுத்திய ஓர் அளவை நிலை ஆய்வாகும். இது தரம் 6 மாணவர்களின் எழுத்துத்திறன் விருத்தி பின்னடைவாக உள்ள போது கற்றலில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கண்டறிவதனை நோக்காகக் கொண்டு இடம் பெற்றுள்ளது. ஏறாவூர்க் கல்விக் கோட்டமானது I AB பாடசாலை நான்கையும் 1C பாடசாலை ஒன்றையும் வகைll ஐந்தையும் வகை!!! பாடசாலை எட்டினையும் கொண்டு காணப்படுகின்றது. இவற்றில் இருந்து தரம் 6 வகுப்பினைக் கொண்ட 10 பாடசாலைகள் மாத்திரம் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பத்து பாடசாலைகளில் இருந்தும் தரம் 6இல் கல்வி கற்கும் 648 மாணவர்களில் இருந்து ஆண். பெண் என்ற ரீதியில் படையாக்கப்பட்டு பின் இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 5:1 எனும் விகிதாசாரத்தின் அடிப்படையில் 125 மாணவர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோரில் 5:1 எனும் விகிதத்தில் 25 பெற்றோரும் 12 அதிபர்கள் நோக்க மாதிரியின் அடிப்படையிலும் தரம் 6 இற்குக் கற்பிக்கும் 82 ஆசிரியர்களில் இருந்து 2:1 எனும் விகிதாசாரத்தின் அடிப்படையில் 41 ஆசிரியர்களும் படையாக்கப்பட்டதன் பின் இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளிடமிருந்து வினாக்கொத்து, நேர்காணல் போன்ற ஆய்வுக்கருவிகள் மூலம் தரவுகள் பெறப்பட்டன. பண்புரீதியாகவும், அளவுரீதியாகவும் பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் Excel மென்பொருளினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள், வரைபுகள் மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளன. அதிலிருந்து பின்வரும் முடிவுகள் பெறப்பட்டன. எழுத்துத்திறன் பின்னடைந்த மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் பின் தங்கிய நிலையில் காணப்படுவதுடன் இந்நிலைமையானது ஆசிரியரின் கற்பித்தல் செயற்பாடுகளிலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. அந்தவகையில் தொகுத்து நோக்குமிடத்து மாணவர்களிடத்தே எழுத்துத்திறன் விருத்தி மேம்படுத்தப்படல் அவசியமாகும். இதனடிப்படையில் மாணவர்களின் எழுத்துத்திறன் விருத்தியினை மேம்படுத்துவதற்கான விதப்புரைகளும் இவ்வாய்விலே முன்மொழியப் பட்டுள்ளன. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka en_US
dc.subject எழுத்துத் திறன் en_US
dc.subject விருத்தி en_US
dc.subject கற்றல் en_US
dc.title தரம் 06 மாணவர்களின் எழுத்துத்திறன் விருத்தி கற்றலில் ஏற்படுத்தும் தாக்கம் en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account