க.பொ.த உயர்தர கலைப்பிரிவு மாணவர்களுக்கு கற்பிப்பதில் நியமனப் பாடம் சாரா ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்

Show simple item record

dc.contributor.author பாத்திமா ஜூஸ்லா, முஹம்மட் றிஸ்வான்
dc.date.accessioned 2024-04-08T09:43:40Z
dc.date.available 2024-04-08T09:43:40Z
dc.date.issued 2023
dc.identifier.citation FAC1160 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15369
dc.description.abstract "க.பொ.த உயர்தர கலைப்பிரிவு மாணவர்களுக்கு கற்பிப்பதில் நியமனப் பாடம் சாரா ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்" எனும் கருப்பொருளில் அமையப் பெற்ற அளவை நிலை ஆய்வாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு மாணவர்கள் வகுப்பறைக் கற்றலிலும் சுய கற்றலிலும் போதியளவு ஆர்வம் காட்டாதவர்களாகக் காணப்படுகிறார்கள். இவர்களுக்கான கற்பித்தலை நவீனத்துவம் வாய்ந்ததாக மேம்படுத்துவதற்கு நியமனப் LITLD சாரா ஆசிரியர்கள் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்கிறார்கள். நியமனப் பாடம் சாரா ஆசிரியர்கள் தம் கற்பித்தலை வினைத்திறனாக மேம்படுத்துவவதற்கு சவாலாக அமையும் காரணிகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதனை நோக்காகக் கொண்டு இல் ஆய்வு இடம்பெற்றது முல்லைத்தீவு மாவட்ட, கரைத்துறைப்பற்றுக் கல்விக் கோட்டத்தில் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு மாணவர்களுக்கு கற்பிக்கும் நியமனப்பாடம் சாரா ஆசிரியர்களைக் கொண்டு இவ் ஆய்வு முன்னெடுக்கப்பட்டமையால் IAB மற்றும் IC பாடசாலைகள் என்ற ரீதியில் 09 பாடசாலைகளும் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டன. இவ் ஆய்விற்காக ஆய்வு மாதிரிகளாக 09 அதிபர்கள், 24 நியமனப் பாடம் சாரா ஆசிரியர்கள் மற்றும் 12 பகுதித் தலைவர்கள் ஆகியோர் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதற்கமைவாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டதுடன் 85 க.பொ.த உயர்தர கலைப்பிரிவு மாணவர்கள் படிமுறை எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஆய்விற்காக தரவு சேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து மற்றும் நேர்காணல் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாகப் பெறப்பட்ட அளவுசார் மற்றும் பண்புசார் தகவல்கள் Microsoft Excel 2013 எனும் மென்பொருள் முறையினூடாக பகுப்பாய்வு மற்றும் வியாக்கியானம் செய்யப்பட்டு இதன் மூலம் பல்வேறு முடிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நியமனப் LIFTLID சாரா ஆசிரியர்கள் தமக்குரிய கற்பித்தலை மேற்கொள்வதற்குரிய வழிகாட்டல் இன்மை, நவீன கற்பித்தலை ஏற்படுத்துவதற்கு பாடசாலையில் நிலவும் வளப் பற்றாக்குறைகள், பெற்றோர்கள், நலன் விரும்பிகளின் போதியளவு பங்களிப்பின்மை, வலயக் கல்விப்பணிமனையால் கலைப்பிரிவு பாடங்களுக்கு வழங்கப்படும் குறைந்தளவு முக்கியத்துவம் போன்ற பல பிரச்சினைகள் கணிடறியப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நியமனப் பாடம் சாரா ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகரமாக முறியடித்து வினைத்திறனாகவும் வாண்மை விருத்தியுடனும் தம் கற்பித்தலை மேற்கொள்ளும் வகையில் விதப்புரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka en_US
dc.subject நியமனப் பாடம் சாரா ஆசிரியர்கள் கற்பித்தல் en_US
dc.subject க.பொ.த உயர்தர கலைப்பிரிவு மாணவர்கள் en_US
dc.title க.பொ.த உயர்தர கலைப்பிரிவு மாணவர்களுக்கு கற்பிப்பதில் நியமனப் பாடம் சாரா ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account